Monday, October 21, 2013

சிரியா யார் வலையில் ? (பாகம் 02)

ஆரம்ப ஆர்ப்பாட்டங்களில் சாதாரண பொதுமக்களே கலந்துகொண்டனர். இவர்களுக்கு ஆயுதம் ஏந்துவேண்டிய தேவை இருக்கவில்லை. ஏனெனில் இவர்களின் கோரிக்கை ஒன்றே, அது ஜனநாயக ரீதியான அரசாங்கம்இவர்களின் கோரிக்கையை சற்றும் பரிசீலனை செய்ய தயாரில்லாத அசாத்இராணுவத்தாங்கிகள் மூலமாகவும் போர் விமானங்கள் மூலமாகவும்  அவர்களுக்கு பதில் அளித்தமை இராணுவத்துக்குள்ளும் அரசுக்குள்ளும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அப்பாவி மக்கள் அநியாயமாக கொல்லப்படுவதை எதிர்த்து இராணுவத்தில் இருந்த பெரும்பாலான சுன்னி இராணுவ அதிகாரிகள், வீரர்கள்  இராணுவத்தை விட்டும் தமது ஆயுதங்கள் சகிதம் வெளியேறத்தொடங்கினார்கள். இவர்கள் Free Syrian Army (FSA) என்ற ஆசாத்தின் இராணுவத்துக்கு எதிரான ஆயுத அமைப்பை உருவாகினார்கள். ஆரம்பத்தில் FSA யிடம் சிறிய ரக ஆயுதங்களே இருந்தபோதும் சில காவலரன்கள், முகாம்களை தாக்கி அதன்மூலம் பெறப்பட்ட   ஆயுதங்களே இராணுவத்துக்கு எதிராக ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டன. முன்னாள் இராணுவ வீரர்களுடன் உள்ளூர் இளைஞர்களும் இணையத்தொடங்கினார்கள்.

மறுபுறம் அரசாங்கத்தை விட்டு வெளியேரிய முக்கிய அமைச்சர்கள், உயர் அதிகார்களும் சிரிய தேசிய பேரவை Syrian National Council (SNC)  என்ற அரசியல் அமைப்பை (Political Organization) உருவாகினார்கள்எனினும் இந்த  அரசியல்இராணுவ கட்டமைப்புக்கள் சரியான முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கவில்லை. இவர்களுக்குள் யார் தலைமைபொறுப்பை ஏற்பது, எவ்வாறு கூட்டிணைவது என்பது தொடர்பில் பாரிய கருத்துவேறுபாடுகள் இருந்தது. எனினும் ஒருவாராக கடந்த டிசம்பரில் (2012) இரு தரப்பினரும் இணைந்து National Coalition for Syrian Revolutionary and Opposition Forces என்ற அமைப்பை உருவாகினார்கள்எனினும் இந்த அமைப்பு எந்தளவுக்கு தற்போதைய புரட்சியில் தமது செல்வாக்கை வைத்திருக்கின்றது என்பது தற்போது  பெரும்கேள்விக்குறியாக இருக்கின்றது.

அதற்குரிய முக்கிய காரணம், ஆயுத மோதலின் வெற்றி தோல்வியே புரட்சியின் முடிவை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக  இருக்கும் நிலையில், FSA இன் இராணுவ பலத்தை மிஞ்சும் அளவுக்கு , இராணுவ மேலாதிக்கம் செலுத்திவரும் அல் கைதா போராளிகள். இதில் முக்கிய அமைப்பு ஜப்ஹத்- அல்- நுஸ்ரா எனும் அமைப்பாகும். இவர்கள் ஈராக்கில் தொடந்து இயங்கிவரும் Islamic State of Iraq and Levant/Sham (ISIS) எனும் அல்-கைதா அமைப்பின் கிளையாக செயல்படுவதாக அறியப்பட்டாலும் இரு அமைப்புக்களும் இருவேறு அமைப்புக்கள் என்பதே உண்மையாகும்.  அல்-நுஸ்ரா மற்றும் ISIS அமைப்பில் பெரும்பாலும் வெளிநாட்டு போராளிகள் இருப்பதாக குற்றம் சாட்டப்படுகின்றதுஇதிலும் ISIS யில்தான் பெரும்பாலான வெளிநாட்டு போராளிகள் இருக்கிறார்கள். இவர்களில் பெருபாலானோர் வளைகுடா நாடுகளை சார்ந்தவர்கள், இவர்களுக்கு  மேலதிகமாக செச்னியா, பாகிஸ்தான், ஆப்கான் மற்றும் சில ஐரோப்பிய/அமெரிக்கர்களும் இருப்பதாக நம்பப்படுகிறது. எனினும் நுஸ்ரா மற்றும் ISIS போராளிகள் இல்லாமல் அசாத்துக்கு எதிரான முக்கிய வெற்றிகள் பெறமுடியாது என்ற நிலைமையே இன்று காணப்படுகிறது. இவர்கள் ஆரம்பத்தில் FSA யுடன் இணைந்து அசாத்துக்கு எதிராக போரிட்டாலும், பின்னர் FSA இற்குள் மேலோங்கிய SNC யின் கொள்கை பிரச்சினைகள்கள் காரணமாக தனித்து இயங்குவது மாத்திரமின்றி FSA யிற்கும் நுஸ்ராவுக்கும் இடையிலேயே அயுத மோதல்கள் ஏற்பட்டு FSA யின் இராணுவத்தளபதி கமால் ஹமீமியை போட்டுத்தள்ளும்  அளவுக்கு பிரிவினை முற்றியிருக்கிறது. இது ஒருவகையில் அசாதுக்கு சாதகமாக மாறி இருக்கின்றது. போராளிகள் பெரும்பாலும் கெரில்லா போர் உத்தியையே கையாள்வதால், அசாத்தும் லெபனானின் ஹிஸ்புள்ளாவின் நேரடி உதவியை சிலவேளைகளிலும், அசாத்தின் நிழல் இராணுவமாக இயங்கும் சாபிஹா என்ற முற்றுமுழுவதும் அலவி பிரிவிரை கொண்ட துணை இராணுவத்தையும் களத்தில் இறக்கியுள்ளார். அல்-நுஸ்ரா மற்றும் ISIS யிற்கு மேலதிகமாக ௨௦ இற்கும் மேற்பட்ட போராளிக்குழுக்கள் களத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. அவற்றில் அஹ்றார்-அல்-ஷாம், புர்கான், சிரிய முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் போன்றவை பெயர் சொல்லகூடியவையாகும். இதற்கு மேலதிகமாக சிரியாவின் வடக்கில் குர்திஸ்தான் போராளி அமைப்புக்கள் சில அசாத் அரசாங்கத்திற்கு எதிராகவும் சில குழுக்கள் அவருக்கு சார்பாகவும் போராடுகிறார்கள்.     

நாம் விளங்கவேண்டிய சிக்கலான விடயம் இதுதான்.  

இந்த சிரிய உள்நாட்டு போர் அசாத்தின் அரசாங்கத்திற்கும் FSA என்ற போராளிக்குழுவுக்குமிடையாக இருந்தாலும், களநிலவரங்களை சரியாக புரிந்து கொள்வது அவசியமாகிறது.

 FSA இன் நோக்கம் அசாத் இல்லாத சிரியாவின் ஜனநாயக அரசு. இதனை அடைவதற்கு அசாத்தின் இராணுவம் தோற்கடிக்கப்பட வேண்டும். ஆனால் அதற்குரிய வலு FSA யிடம் இல்லை. ஆனால் அதனை அடைவதற்குரிய ஓரளவு பலம் அல்-நுஸ்ரா மற்றும் ISIS யிடம்தான் இருக்கிறது.  அசாத்துக்கு எதிரான தாக்குதல்களின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாகவும் பொது எதிரியாக அசாத் இருந்தாலும்,  FSA யும்  அல்-நுஸ்ரா மற்றும் ISIS தற்போது ஒரு அணியில் இல்லை. அல் கைதாவின் கெரில்லா போரியல் முறையை எதிர்ப்பதற்கு சாபிஹாவும் சில சந்தர்ப்பங்களில் கெரில்லா போரியலில் பல அனுபவங்களை கொண்ட ஹிஸ்புள்ளாவும் களம் இறக்கப்பட்டுள்ளது.

FSA தற்போதைய நிலையில் அசாத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை கைப்பற்றுவது என்பதை விட தனது கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை தக்கவைத்துக்கொள்வதற்காகவே சண்டையிட வேண்டியிருக்கிறது. ஒரு புறம் அசாத்தின் இராணுவம், மறுபுறம் அல் நுஸ்ரா போன்ற சகபோராளிக்குழுக்கள் ,இன்னொரு புறம் ஹிஸ்புல்லா போன்ற  எதிரிப்போராளிக்குழுக்கள் என்று மும்முனைகளில் போராடவேண்டிய நிலையில் FSA இருக்கிறது.  இதற்கு சிறந்த உதாரணம் சமீபத்தில் லெபனானிய எல்லையிலுள்ள குசைர் என்ற நகரத்தின் கட்டுப்பாட்டை இழந்ததை குறிப்பிடலாம். இதில் அரம்பத்தில் FSA இன் கை ஓங்கியிருந்த போதும், களத்தில் ஹிஸ்புல்லாவின் திடீர் பிரவேசம்   வெற்றி தோல்வியை தீர்மானித்தது. இதற்கு மேலதிகமாக தற்போதைய சிரியாவின் ஒவ்வொரு நகரமும் அல்லது நகரின் தனிப்பட்ட பகுதிகள் வேறுபட்ட குழுக்களின் கட்டுபாட்டில் இருக்கிறது. உதாரணமாக மிகப்பெரிய நகரான அலேப்போவின் மத்திய நகரம் இராணுவ கட்டுபாட்டில் இருக்கும்  அதேவேளை ஒவ்வொரு புறநகர் பகுதியும் வெவ்வேறு போராளிகளி குழுக்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

    (சிரியாவின் தற்போதைய கட்டுப்பாட்டு நிலவரத்தை காட்டும் படம்) 


இவ்வாறான இக்கட்டான நிலையில் FSA இன் முன் சில தெரிவுகளே இருக்கின்றன. ஒன்று இறுதிவரை தனித்து போராடி இராணுவத்தை வெற்றி கொள்வது. அது தற்போதைய நிலையில் சாத்தியபடாத ஒன்றாகும். அடுத்தது சக போராளிக்குழுக்களுடன் இணைந்து போராடுவது. கொள்கை பிரச்சினைகள் பெரியளவில் மேலோங்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் அதற்கான வாய்ப்பும் குறைவாகவே இருக்கிறது. அடுத்த தெரிவு அசாத் அரசுடன் சமரசர பேச்சுவார்த்தை.

தி கார்டியன் பத்திரிகை சமீபத்தில் ஒரு செய்தியை கசிய விட்டிருந்தது, FSA இன் இரண்டு முக்கிய அதிகாரிகள் கடந்த ஒகஸ்ட் மாதம் நடுப்பகுதியளவில் அசாத் அரசுடன் சமரச பேச்சுவார்த்தைக்கு டமாஸ்கஸ் நகருக்கு பாதுகாப்பு உத்தரவாதம் கொடுக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர் என்ற செய்தியாகும். இந்த செய்தி தற்போதுதான் கசிந்திருக்கின்றது. இதன் உண்மைத்தன்மை எவ்வாறு இருந்தபோதிலும் இதன் பின்னணியில் மற்றொரு சம்பவம் தொடர்பு படுகிறது. அது ஒகஸ்ட் 21 இல் டமாஸ்கஸ் நகருக்கு அருகாமையில் நடந்த கோழைத்தனமான இரசாயன குண்டுவிச்சு தாக்குதலாகும். 

வலை விரியும் ..

No comments:

Post a Comment